பார்வையிட்டவர்கள்

இறை பிரார்த்தனையின் அடித்தளம்.

Saturday, January 9, 2010

ஓம்காரம்

ஸ்லோகங்களின் உச்சரிப்பு என்பது மிக முக்கியம்.நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் கந்தசஷ்டி கவசம் படிக்கும் போது சிரத்தையுடன் படிக்க வேண்டும் என்பதை இல்லை என்றால் தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்லுவார்கள்...அப்பொழுது தான் நாம் அதனை முழுமனதோடு சொல்லுவோம் என்று சொல்லுவார்கள். ஸ்பஷ்டமாக நம்மால் சொல்ல முடியாமல் போனாலும் ஒரளவு அதன் அர்த்தத்தை மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளலாம் என்பதே என் கருத்து. எல்லா வார்த்தைகளுக்கும் ஓர் அர்த்தம் இருக்கிறது..அதனை புரிந்து கொண்டு நாம் படித்து பழகுவோம். ஆதிகாலத்திலே தோன்றியது தான் ஓம் என்ற மந்திரம். அ,உ,ம் என்ற மூன்றேழுத்தின் மொத்தம் "ஓம்" அ என்பதை நம் அடி வயிற்றில் இருந்து கொண்டு வந்து உ என்பதை நம் தொண்டையில் உச்சரித்து ம் என்று நம் உதட்டில் முடியும். இந்த ஓம் என்ற மந்திரம் பொதுவாக இம்மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு தான் பாடத்தை தொடங்குவோம். இறைவன் நம் இடத்திற்கு இவ்வொலியின் மூலம் வந்து அமர்வதாக எண்ணி நாம் இதனை செய்கிறோம். ச ரி க ம ப த நி ச...எனற ஒலிகள் தான் முதலில் தோன்றியதாக சொல்லுவர்.ஆனால் அதற்கு முன்பே இந்த ஓம்காரம் தோன்றியது எனவும் சொல்வார்கள். அப்படிப்பட்ட இந்த மந்திரத்தை ஒரு ஸ்லோகம் மூலம் நாம் இங்கு பார்ப்போம்... இங்கு நான் ஸ்கன் செய்ததை பதிவு செய்கிறேன்...

ஸ்லோகம் அதன் அர்த்தமும் அதன் தொடர்பான கதையும் கொடுக்கிறேன். நன்றி...

No comments:

Post a Comment

Followers

About Me

Spreading goodness will gives the feeling of goodness only!Help ever Hurt Never is thing to follow in our life which is very simple