பார்வையிட்டவர்கள்

இறை பிரார்த்தனையின் அடித்தளம்.

Sunday, January 17, 2010

திருவிழா.....(1)

பல வேற்றுமைகளுக்குக்கிடையே ஒற்றுமை காணும் உயர்ந்த பண்பை உடையது இந்தியா.

சமயப்பிரிவுகளில் ஒவ்வொன்றும் அதற்கே உரிய நம்பிக்கைகளையும் புராணாங்களையும் கொண்டுள்ளது.


இந்நம்பிக்கைகள் பல வேறு விதமான வழிபாடுகளிலும் திருவிழாக்களிலும் பெரும்மைப்படுத்தப்படுகின்றன.

திருவிழாக்கள் சமூக வாழ்வு
க்கு உயிரூட்டுகின்றன.

பொதுவான இறந்த கால நிகழ்ச்சிகளை ஒன்று சேர்த்து நினைப்பதாலும்,குறிபிடத்தக்க
நிகழ்ச்சிகளைப் பலரையும் கூட்டிச் சந்தோஷமாகக் கொண்டாடுவதாலும்,அவை மக்களை ஒற்றுமைப்படுத்துகின்றன.

உலகத்தின் மற்ற பகுதிகளிலுள்ள திருவிழாக்களைப் போலவே
இந்தியத் திருவிழாக்களும் மக்களுக்கு வாழ்வில்லுள்ள உற்சாகம்,இயற்கையிலுள்ள் பேரின்பம்,பகட்டான காட்சிகளில் ப்ரியம் இவற்றை வெளிப்படுத்துகின்றன.

இந்திய பஞ்சாங்கம் திருவிழாக்களின் நீண்ட பட்டியலைக் கொண்டது.
அத்திருவிழாக்கள் எண்ணிக்கையில் எண்ணற்றவையாக இருப்பதுபோலவே,தம் மூல காரணத்திலும் வேறுபடுகின்றன.

ஆன்மீக குருக்களினல்லது தேசிய வீரர்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடும் பண்டிகைகள் சில,பருவங்களின் சாசுவத் கதிகளைக் கொண்டாடும் பண்டிகைகள் சில,இன்னும் சில பண்டிகைகள் மதங்களையும்,மக்கள் பொதுவாக நம்பும் புராணங்களையும் ஆதாரமாக கொண்டுள்ளன்.

நாம் ஒவ்வொரு பண்டிகையினுடைய பொருளையும் நோக்கத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

அப்படி ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமி நாள
ன்று கொண்டாடப்படும் குருபூர்ணிமாவை பற்றி கீழே காண்போம். நன்றி...

No comments:

Post a Comment

Followers

About Me

Spreading goodness will gives the feeling of goodness only!Help ever Hurt Never is thing to follow in our life which is very simple